Friday, August 14, 2015

ஒரு மதிப்பெண் வினாவிடை - 5

காலாண்டு தேர்வுப் பகுதி
ஒரு மதிப்பெண் வினாவிடை
தமிழ் இரண்டாம் தாள்
பயிற்சித்தாள் /தேர்வுத்தாள்
உரிய விடை மற்றும் கோடிட்ட இடம் நிரப்புக
பயிற்சித்தாள் -                                                                                                     மதிப்பெண் -  18
காலம் 45 நிமிடம்

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்

1.        இளவழகன் வந்தான்.  இது ........................தொடர்.
1.        குறிப்பு     2.  வெளிப்படை   3. எதுவுமில்லை.
2.        மாடு என்னும் சொல் ....................... ஆகும்.
1.        உயர்திணைப்பொதுப்பெயர்  2. அஃறிணைப் பொதுப்பெயர்  3. விரவுப்பெயர்
3.        மாடு கன்றை ஈன்றது. இத்தொடரில் மாடு என்பது.................குறிக்கும்
1.        பசு   2. காளை   3. கன்று
4.        வடக்கு என்னும் திசைப்பெயரொடு பிற திசைகள் வந்து சேரும்போது..............
1.        நிலைமொழி ஈறு நீங்கும்  2. நிலைமொழி ஈறும் மெய்யும் நீங்கும்  3. வருமொழி முதல் கெடும்.
5.        மேற்கு  நாடு  .......................எனச் சேரும்.
1.        மேற்கு நாடு 2. மேநாடு  3. மேனாடு
6.        கருமை  குழி  என்பது .............. எனும் விதிகளின் படி  புணரும்.
1.        ஆதிநீடல், இனமிகல்  2. தன்னொற்றிரட்டல், இடையுகரம் இ ஆதல்  3.ஈறுபோதல், இனமிகல்


கோடிட்ட இ்டம் நிரப்புதல்

7.        பூங்குழலி பொம்மை செய்தாள். இத்தொடரைச் செயப்பாட்டு வினையாக மாற்றும்போது, பொம்மை......................செய்யப்.............. என வரும்.
8.        அழகன் பாடம் எழுதுகிறான்.  இத்தொடரில், ஓர் எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்தால் ......................... தொடர் ஆகும்.
9.        அன்பரசன் திருக்குறளைக் கற்றான்.  இத்தொடர் பிறவினையாக மாறும்போது, அன்பரசன் திருக்குறளை.............................என வரும்.
10.     ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது...................................
11.     தொழிலைக் குறிக்கும் சொல்.................................
12.     வினைமுற்று  ..........................., .............................. என இருவகைப்படும்.
13.     ஓர் எச்ச வினை ...............கொண்டு முடிந்தால், அது பெயரெச்சம் எனப்படும்.
14.     ஒரு பொருள் குறித்துவரும் சொற்களையே........என்பர்
15.     ஒரு பொருட் பன்மொழிக்குச் சான்று............................
16.     இது செய்வாயா என்னும் வினாவிற்கு வயிறு வலிக்கும் எனக் கூறுவது.............விடை.
17.     ஆடத் தெரியுமா என்னும் வினாவிற்குப் பாடத் தெரியும் எனக் கூறுவது..............விடை.

18.     நன்னூல் கிடைக்குமா எனக் கடைக்காரரிடம் கேட்பது..........வினா.

No comments:

Post a Comment